Pages

Wednesday, March 2, 2011

Volume 7 - Bakthanaai Paada Maatean





Volume 6 - Embiran Enakamudam



Sakala kala valli maalai ~ Saraswati Poojai Paadal in Tamil







Volume - 5

சகல  கலா  வல்லியே - சரஸ்வதி  பூஜை  பாடல் 


வெண்  தாமரைக்கு  அன்றி  நின்  பதம்(பாதம்)  தாங்க..
என் வெள்ளை  உள்ளம், தன்  தாமரைக்கு  தகாது  கோலோ,
சகம்  ஏழும்  அளித்து, உந்தான்  உறங்க-ஒழித்தான்  பித்தாக 
உண்டாகும்  வண்ணம் கண்டான்,
சுவை  கொள்  கரும்பே, சகல  கலா  வல்லியே! 

நாடும்  பொருட்சுவை , சொற்சுவை  தொய்  தர  நார்  கவியும் ,
பாடும்   பணியில்  பணித்து அருள்வாய், பங்கய  ஆசனத்தில் 
கூடும்  பசும்   பொற்  கோடி டியே, கன தன  குன்றும்  ஐம்பார்,
காடும்   சுமக்கும்  கரும்பே, சகல கலா வல்லியே! 

அளிக்கும்  செந்தமிழ்  தேள் அமுது  ஆர்ந்து , உன்  அருட்  கடலில் ,
குளிக்கும்  படிக்கு , என்று  கூடும்  கொலோ , உள்ளம் கொண்டு  தெள்ளி ,
தெளிக்கும்  பனுவரபுலவோர்  கவி  மழை  சிந்தக்கண்டு ,
கலிக்கும்  கலாப  மயிலே , சகல கலா வல்லியே!

தூக்கும்  பனுவர துறை  தோய்ந்த  கல்வியும் , சொற்  சுவை  தொய்,
வாக்கும்  பெருக  பணித்து  அருள்வாய்  வடநூற்  கடலும் ,
தேக்கும்  செழுந்தமிழ்ச் செல்வமும்  தொண்டர்  சென்னாவில்  நின்று ,
காக்கும்  கருணைக்கடலே , சகலகலா  வல்லியே!

பஞ்பிதம் தரும்  செய்ய  பொற்பாத பங்கேருஹம்  என்,
நெஞ்ச  தடத்து  அலராதது  என்னே  நெடுதால்  கமலத்து ,
அஞ்ச  துவசம்  உயர்ந்தோன்  செந்நாவும்  அகமும்  வெள்ளை,
கஞ்ச  தவிசு  ஒத்திருந்தாய் , சகலகலாவல்லியே!

பண்ணும்  பரதமும்  கல்வியும் , தீஞ்சொற்  பனுவலும் , யான் ,
என்னும்  பொழுது  எளிது எய்த நல்காய்,  எழுதா  மறையும்,
விண்ணும்  புவியும்  புனலும்  கனலும்  வெங்காலும்  அன்பர்,
கண்ணும்  கருத்தும்  நிறைந்தாய், சகலகலா  வல்லியே!

பாட்டும், பொருளும்  பொருளால்  பொருந்தும்  பயனும் என்  பால் ,
கூட்டும்  படி  நின்  கடைக்கண்  நல்காய், உளம்   கொண்டு  தொண்டர் ,
தீட்டும்  கலை  தமிழ்  தீம்பால்  அமுதம்  தெளிக்கும்  வண்ணம்,
காட்டும்   வெல்  ஓதிமப்பேடே , சகலகலா  வல்லியே!

சொல்வீர்  பணமும் , அவதானமும்  கல்வி  சொல்ல  வல்ல ,
நல்  வித்தையும் விதையும்  தந்து  அடிமை  கொள்வாய் , நளினி  ஆசனம்  சேர்
செல்விக்கு   அரிது  என்று  ஒரு  காலமும்  சின்தாமை  நல்கும் ,
கல்வி  பெரும்  செல்வ  பேரே , சகலகலா  வல்லியே!

சொற்கும்  பொருட்கும்   உயிராம்  மெய்  ஞானத்தில்  தோற்றம் என்ன ,
நிற்கின்ற  நின்னை  நினைப்பவர்  யார்  நிலம்  தொய  புழைக்கை ,
நற்குஞ்சரத்தின்  பிடியோடு  அரசு  அன்னம்  நானா  நடை,
கற்கும் பதாம்  படம் பயத்தாலே , சகலகலா வல்லியே!

மண் கண்ட  வெண்  குடை  கீழாக , மேற்ப்பட்ட  மன்னனும்   என்,
பன்  கண்ட  அளவில்  பணிய  செய்வாய் , படைப்போன்   முதலாம் ,
வின்  கண்ட  தெய்வம்  பல  கோடி  உண்டேனும் , விளிம்பில்  உன்னை  போல்
கண்  கண்ட  தெய்வம்  உளதோ , சகலகலா  வல்லியே!




Volume 3 - Azhukku Mei Kodu from Thevaram